மருத்துவர் என் கையில்
மகளை தந்தது
நேற்று போல உள்ளது.
நான்காண்டு கடந்து விட்டது !
மகளதிகாரத்திற்கு
அகவை நாலாக போகிறது !
சுவரெங்கும் அவள்
தூரிகை வண்ணங்கள் !
அலைபேசி முழுக்க
அவள் புகைப்படங்கள் !
அப்பா என்று என்னை
அழைக்கும் அழகிய
கவிதை அவள் !
ஏதேதோ பேசுவாள்
திட்டுவாள், கடிப்பாள்
எல்லாமே என் மனதை
ஈர்க்கும் குறும்படங்கள் !
No comments:
Post a Comment