Tuesday, 22 October 2019

மழை

பால்யத்ததில் மழை
பட்டுப் பூச்சிகளை
ரசிக்க வைத்தது!

பள்ளி பருவ மழை
கூடுதல் விடுமுறை/
விளையாட்டு தந்தது!

கல்லூரி கால மழை
நனைந்து கலந்து
கரைந்து ரசிக்க
வைத்தது!

வேலை தேடும் கால மழை
ஆடை அழுக்கு, ஈரம் உலர்த்த
பயம் தந்தது!

கல்யாணத்துக்கு பின் மழை
மனைவி, தேநீர், பால்கனி
அது ஒரு அழகியல்!

சென்னை பெருமழை
அக்கறை கொண்டோரின்
அகங்களை படம் பிடித்தது!!!

No comments:

Post a Comment