Thursday, 6 June 2019

உழுதவன் கணக்கு


முதலில் உரம் என்றார்கள்.
உரம் போட்டபின் பயிர்
வளர்ச்சி நன்றாய் இருந்தது!

பிறகு பூச்சிக்கொல்லி
பூச்சியை அழித்தது.
தற்கொலைக்கும் உதவியது!

அப்புறம் ட்ராக்டர்
மாடு ஆறுமணி நேரம்
செய்யும் வேலையை
அரை மணியில் செய்தது!

வாயில்லா சீவனை வஞ்சிக்க
மனமில்லாமல்
வாடகைக்கு இயந்திர உழவு
செய்தான் உழவன்!

நாளடைவில் உரக்கடைக்காரன்
தான் தீர்மானித்தான் என்ன உரம்.
என்ன மருந்தென்று!

விவசாயின் வருமானத்தை
எதுவும் மாற்றவில்லை!

வீரிய விதைகளை விலைக்கு
வாங்கினான் விவசாயி!

விவசாய பொருளுக்கு
விலையை எவனோ
தீர்மானிக்கிறான்!!!

No comments:

Post a Comment